×

பூத் ஏஜென்டுகள் திமிராக இருந்தால் ஓட்டுகள் விழாது: பாஜவினருக்கு மோடி அட்வைஸ்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 10 மக்களவை தொகுதியில் உள்ள 22,648 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாஜ தொண்டர்களுடன் நமோ ஆப் மூலம் டிஜிட்டல் பேரணியில் பங்கேற்று பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: நீங்கள் வாக்காளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறீர்கள். அவர்களுக்கு நீங்கள் பாஜவின் முகமாக இருக்கிறீர்கள். அவர்களை சந்திக்கும் போது உங்களில் அவர்கள் மோடியை பார்க்கிறார்கள். நீங்கள் எதை சொன்னாலும் அதை மோடியே சொல்வதாக உணர்கிறார்கள்.

வாக்குச்சாவடியில் வெற்றி பெற்றால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் பூத் ஏஜென்ட்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். உங்கள் நடத்தை, நம்பிக்கை, உற்சாகமாக இருக்கிறீர்களா என்பதை மதிப்பிடுவார்கள். நீங்கள் கொஞ்சம் ஆணவம் காட்டினாலும் மக்கள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். எனவே பூத் ஏஜென்ட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும், கட்சி தொண்டர்கள் சிலரிடமும் மோடி பேசினார்.

The post பூத் ஏஜென்டுகள் திமிராக இருந்தால் ஓட்டுகள் விழாது: பாஜவினருக்கு மோடி அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Lucknow ,Lok Sabha ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும்...